2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இ.க.க.(மா-லெ)-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா பல்வேறு தேசிய இனங்கள்,இனக்குழுக்கள்,மொழிகள்,பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் மக்கள் தொகையை கொண்ட பரந்துபட்ட நாடாகும்.
அதிகார மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்தியா ஒரு அரைக் காலனி அரை நிலவுடமை நாடாக இருந்து வருகிறது.
தரகுப் பண்புடைய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியாேரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசு ஏகாதிபத்தியங்களின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் சேவகம் புரிந்து வருவதாேடு அவற்றை பாதுகாத்தும் வருகிறது.
எனவே இந்தியப் புரட்சிக் கட்டம் முதன்மையாக விவசாயப் புரட்சியை அச்சாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியாகும்.
எனவே புரட்சியின் இலக்குகள் என்பவை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு அதிகார வர்க்க முதலாளியம் ஆகியவையாகும்.
இந்த நோக்கத்தை அடையப் பெறுவதற்கான மூன்று மந்திரக் கோல்கள் பின்வருமாறு, அவையாவன ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் படை, ஐக்கிய முன்னணி ஆகியவையே ஆகும்.
2) இப்பாேதுள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முதன்மையாக 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் முன்மொழியப்பட்டுள்ள சட்டமியற்றும் அமைப்புகளும், வயது வந்தாேருக்கு வாக்குரிமையும் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதற்கானதே தவிர வேறு ஒன்றல்ல.
இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிறுவ முடியாதபடி அடிப்படைக் கட்டமைப்பைப் பாதிக்காத வகையில் மேற்கட்டுமானத்தில் ஆளும் வர்க்கங்கள் சில மாற்றங்களைச் செய்துள்ளன.
உண்மையில் ஆளும் வர்க்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார அரசியல் கொள்கைகள் காலனிய இந்தியா அரைக்காலனி அரைநிலவுடமை நாடாக மாறியுள்ளதைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
3)அப்படியாயின் புரட்சிக்கான பாதைதான் எது?
சந்தேகத்திற்கிடமின்றிப் பிறப்புரட்சிகளின் பாதையைப் போன்றே ஆயுதப் புரட்சிப் பாதையும் நிலவும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தை ஆயுதமேந்தித் தூக்கி எறிவதுதான் இங்கே ரஷ்யா, சீனா உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ஆயுதப் புரட்சி நடந்துள்ளதை நாம் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஒவ்வாெரு நேரத்திலும் மீண்டும் மீண்டும் ரஷ்யப் பாதையைப் பின்பற்ற வேண்டுமா? சீனப் பாதையைப் பின்பற்ற வேண்டுமா? என்று விவாதிக்கப்படுகிறது.
நாம் தெள்ளத்தெளிவாக கூற விரும்புவது யாதெனில் இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சி இந்தியப் பாதையில் நிறைவு செய்யப்படும் என்பதுதான்.
அதே நேரத்தில் ரஷ்ய சீனப் புரட்சிகள் உள்ளிட்டு உலகத்தில் நடைபெற்ற பிற புரட்சிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
இங்கு மீண்டும் நமக்குச் சொந்தமான கடந்தகால தற்பாேதைய புரட்சிகரப் போராட்டங்களின் அனுபவங்களுக்கு நாம் அழுத்தமளிக்க வேண்டும்.
4) இந்தியா ஒரு பின்தங்கிய நாடாகும், சமூகத்தின் வளர்ச்சியில் சமச்சீரற்ற தன்மை நிலவுகிறது.இந்தியா தனக்கே உரிய குறிப்பான தன்மைகளைக் கொண்டுள்ளது.
எனவே இங்கு இயக்கங்களின் வளர்ச்சியும்கூட பகுதி அல்லது பகுதிகளின் துல்லியமான சூழலுக்கேற்ப சமச்சீரற்றதாக இருக்கிறது.
சீனம்,வியட்நாம் உள்ளிட்ட பிற பின்தங்கிய நாடுகளின் மக்கள் யுத்த அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடியவையாகவே உள்ளன. நாம் அவற்றை ஆராய்ந்தறிந்து நமது புரட்சியின் குறிப்பான நடைமுறைகளில் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
நமது நாட்டின் குறிப்பான சூழலுக்கேற்ப மக்கள் யுத்தக் கோட்பாட்டை நாம் நடைமுறைப் படுத்தும்போது நாம் இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் ஆகியாேரின் போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களை மிகக் குறிப்பாகத் தெலுங்கானா, நக்சல்பாரிப் போராட்ட அனுபவங்களைத் தொகுத்து ஆராய வேண்டும். மக்கள் யுத்தத்திற்காக மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைப்பாக்கி அணிதிரட்டிப் பங்கேற்க வைப்பதன் மூலம் மட்டுமே மக்கள் யுத்தத்தை நம்மால் நடத்த முடியும்.
எப்படியிருப்பினும் புரட்சியின் சில வளர்ச்சிக் கட்டங்களில் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், மக்கள் ஆயுதமேந்திய பேரெழுச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
புரட்சிக்கு முந்தைய சீனம், மற்றும் பிற காலனிய அரைக் காலனிய நாடுகளைப் போன்றல்லாமல் இந்தியா மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசுக் கட்டமைப்பையும் ஒரு பாராளுமன்றத்தையும், நன்றாகக் கட்டியமைக்கப்பட்ட ராணுவத்தையும், மிகவும் வளர்ச்சியடைந்த தகவல் தொடர்பு அமைப்பையும், உயர்ந்த அளவிலான தொழில்மயமாக்கலையும் நகரமயமாக்கலையும் கொண்டுள்ளது.
இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும்கூட, பண்பு மற்றும் நோக்கங்கள் ஆகியவையும், நீண்டகால மக்கள் யுத்தக் கோட்பாடும் அந்நாடுகளுக்குச் சமமாக இங்கும் நடைமுறைப்படுத்தத் தக்கவையாகும்.
நமது செயல் உத்தியை வகுக்கும் போது சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் உள்ள ஒத்த தன்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேறுபட்டத் தன்மை என்பது ஒரு ஆயுதப் புரட்சியின் மூலம் ஆயுதமநே்திய எதிர்ப்புரட்சியை சீனம் சந்தித்து வந்தது.
இந்தியாவைப் போன்று சீனத்தில் பாராளுமன்றம் இல்லை.
சீனத்தில் மக்கள் திரள் இயக்கங்களுக்கு எந்தச் சட்ட வகைப்பட்ட வாய்ப்புகளும் இருக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி அங்கு ஆரம்பத்திலிருந்தே சட்டவிராேத அமைப்பாக ஆக்கப்பட்டிருந்தது இந்தியாவுடன் ஒப்பிடும் போது மலைப்பாங்கான பிரதேசங்கள் சீனத்தில் மிகவும் பரவலாக இருந்தது.
ஆயினும் ஒத்தத் தன்மைகளும் உண்டு, விடுதலைக்கு முந்திய சீனம் ஒரு அரைக்காலனி அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதாேடு அடிப்படையில் ஒரு விவசாய நாடும் ஆகும்,
அங்கும் புரட்சியின் இலக்கு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளியம் ஆகும்.
புரட்சியின் கட்டமும் புதிய ஜனநாயகப் புரட்சி ஆகும், ஏறத்தாழ இந்த அம்சங்கள் எல்லாமே இந்தியாவில் உள்ளன.
5) மார்க்சிய-லெனினிய வாதிகளாகிய நாம் ஒவ்வாெரு புரட்சியும் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை நம்புகிறாேம்.
மார்க்சிய-லெனினிய வாதிகள் சரியான மூல உத்தியையும், செயல் உத்தியையும் தீர்மாணிப்பதன் மூலம் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி சாதகமற்ற அம்சங்களைக் கடக்கிறாேம்.
இந்தியாவின் மைய மற்றும் எல்லையோரப் பிரதேசங்களில் பெருமளவில் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவை தொடாத பின்தங்கிய பகுதிகளாக உள்ளன.
இன்னும் சிறப்பாகக் கூற வேண்டுமெனில் தகவல் தொடர்புகள் அற்பமானதாகவும் திறனற்றதாகவும் உள்ளன.
மேலும் இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளதாேடு கடுமையாகச் சுரண்டப்படுவதால் அதிகரித்த அளவில் ஆயுதப் புரட்சிக்குத் தயாராக உள்ளனர்.
மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்கள் மீதும் அரசின் ஒடுக்குமுறை, புவியியல் ரீதியான சூழல், முறையான போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு இல்லாமை ஆகிய எல்லாமுமாகச் சேர்ந்து ஆயுதப் புரட்சிக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த சூழல்களைச் சாதகமாகக் கொண்டு நாகர்கள், மிசாேக்கள், மற்றும் பிற தேசிய இனங்கள், ஆயுதப்பாேராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
இவைகளும் கூட நமது புரட்சிக்குச் சாதகமானவை ஆகும்.
கோட்பாட்டளவில் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களையும், உரிமைகளையும் நாம் ஆதரிக்கிறாேம்.அதே நேரத்தில் இவற்றை நோக்கிக் குறிப்பான நிலையை எடுப்பதற்கு முன்னால் நாம் ஒவ்வாெரு போராட்டத்தையும் துல்லியமாக ஆராய்கிறாேம்.
இந்திய ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்தியமும் அவர்களைப் பிளவுபடுத்திச் சகாேதர யுத்தங்களில் சிக்க வைக்கும் சூழல்களுக்கு இரையாகாமல் பொது எதிரிக்கு எதிராகத் தங்களின் போராட்டத்தை நடத்தவும், நிலப்பிரபுத்துவம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அடிமை நுகத்தடியை உடைத்தெறிந்து, தங்களை விடுவித்துக் கொள்ளவும் புதிய ஜனநாயக சமூகத்தைப் படைப்பதற்கும் இந்திய மக்களிடையேயான ஒடுக்கப்படும் மற்றும் சுரண்டப்படும் மக்களின் போராட்டங்களாேடு ஐக்கியப்படவும் செய்தால் மட்டுமே தேசிய இனங்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கவும் அடையப் பெறவும் முடியும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளாேம்.
இந்தியப் புரட்சியை இந்திய மக்கள் வென்றெடுப்பார்கள்.
இப்புரட்சிக்குத் தலைமையேற்கும் பாட்டாளி வர்க்கம் தேசியச் சர்வதேசியச் சூழல்களிலிருந்து எப்பாேதும் சாதகமானவற்றை எடுத்துக்கொள்ளும்.
ஒரு மக்கள் யுத்தத்தில் இதுவே அடிப்படையானதாகும்.
6) நமது நாட்டில் எல்லைக்குட்பட்ட ஜனநாயக உரிமைகளை உடைய ஒரு பாராளுமன்ற அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பிலுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளை அவைகள் எவ்வளவுதான் எல்லைக்கு உட்பட்டதாக இருப்பினும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள்திரள் அமைப்புகளைக் கட்டவேண்டும்.
மக்கள் திரள் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டாக வேண்டும்.
சட்டப்பூர்வமான வாய்ப்புகள் உள்ள காலகட்டம் முழுவதிலும் போராட்ட உணர்வை வளர்த்தெடுப்பதற்காக பெரிய எண்ணிக்கையில் மக்கள் திரட்டப்பட வேண்டும் என்பதாேடு அவர்கள் அமைப்பாக்கப்படவும் அரசியல் உணர்வுள்ளாேராக ஆக்கப்படவும் வேண்டும்.
எப்படியிருப்பினும் எல்லைக்குட்பட்ட உரிமைகளாேடு கூடிய பாராளுமன்ற அமைப்பின் கீழும் கூட ஆளும் வர்க்கங்கள் மக்கள் திரள் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும், எனவே நம்மால் சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கட்டப்படும் அமைப்புகளும், நடத்தப்படும் போராட்டங்களும், சட்ட வரம்புகளைத் தாண்டி மோதுதல் என்ற வழியை நோக்கி முன்னாேக்கிப் போர்க்குணமுள்ள போராட்ட வடிவங்களை எடுக்க வேண்டும்.
மக்களை ஆயுதப் புரட்சியை நோக்கி வழி நடத்துவதும் போராட்டத்தின் முதன்மை வடிவமாக ஆயுதப் பாேராட்டத்தை கட்டியமைப்பதுமே நமது கடமையாகும்.
இந்தப் பின்னணியில் பாராளுமன்றப் பாதையைத் திட்டவட்டமாக நிராகரிக்கும் அதே நேரத்தில் தேர்தல்களைப் புறக்கணிப்பது அல்லது பங்கேற்பது என்பது ஒரு செயலுத்தியே என்பதை நினைவில் கொண்டாக வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சூழலில் என்ன செயலுத்தியைப் பயன்படுத்துவது என்பது குறிப்பான சூழலை சார்ந்ததே ஆகும்.
7) நாம் திட்டவட்டமான பாராளுமன்றப் பாதையை நிராகரிக்கிறாேம்.
அதே நேரத்தில் அராஜகவாதத்தையும், பயங்கரவாதத்தையும் எல்லா வடிவங்களிலும் நிராகரிக்கிறாேம்.
ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே மார்க்சிய லெனினியத்திற்கு அந்நியமானவை ஆகும்.
இந்த இரண்டு அந்நிய போக்குகளையும் நிராகரிக்கும் அதே வேளையில் தற்பாேதுள்ள அரசு அதிகாரத்தைத் தூக்கியெறியவும் அரசியல் அதிகாரத்தைப் பற்றிக் கொள்வதற்கும் எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவாேம்.
ஜனநாயக இயக்கங்களுக்கான எல்லைக்கு உட்பட்ட உரிமைகளும், வாய்ப்புகளும் கூட நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை நமது அனுபவம் காட்டுகிறது.
எனவே சட்டபூர்வமான செயல்முறைகள் சட்டபூர்வமற்ற செயல்முறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் அதே போல் வெளிப்படையான அமைப்புகளை இரகசியமான அமைப்புகளுடன் ஒன்றிணைக்க வேண்டும்.
ஆயினும் பல்வேறு போராட்டங்கள் ஆயுதப் போராட்டம் என்ற வடிவத்தை அடையாத வரையில், சட்டபூர்வமான இயக்கங்களும் மக்கள் திரள் அமைப்புகளும் மற்றும் மக்கள் திரள் போராட்டங்களும் ஒரு முதன்மையான போராட்ட வடிவம் என்ற வகையில் ஆயுதப் போராட்டத்தைக் கட்டியமைக்க உதவவும் சேவை புரியவும் செய்யும், ஆயுதப் போராட்ட வடிவம் என்ற நிலையை எட்டும் போது பிற வடிவங்களிலான போராட்டங்களும் அமைப்புகளும் குறிப்பான சூழலுக்கு ஏற்ப ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும்.
எல்லாப் போர்க்குணமுள்ள போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்கள் அல்ல என்பதை நினைவில் கொண்டாக வேண்டும்.
விவசாயப் போராட்டங்கள் சில தீவிரமான வடிவத்தை எடுக்கக்கூடும் ஆனால் இவற்றை ஆயுதப் போராட்டம் என்று சொல்லிவிட முடியாது.
நமது புறநிலை விருப்பங்களுக்கு இயைந்திராத வகையில் ஒரு சிறு பகுதியில் நடைபெறும் போர்க்குணமுள்ள போராட்டம் ஆயுதமேந்திய விவசாயிகள் போராட்டம் என்ற வடிவத்தை எடுக்கக்கூடும்.
எப்படியிருப்பினும் இது போன்ற சூழலில் ஒரு முறை ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டுவிட்டால் நாம் அதை தடுக்கவாே கண்டிக்கவாே கூடாது.
குறிப்பான சூழலுக்கு ஏற்ப அந்தப் போராட்டம் மேற்காெண்டு பெறும் கூடுதலான அனுபவங்களின் மூலம் நீடித்துத் தொடருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்பாேது பொருளாதார அரசியல் பிரச்சனைகள் மீதான போராட்டங்களை வளர்த்தெடுத்து முதன்மையான போராட்ட வடிவம் என்ற நிலைக்கு அவற்றை மாற்றமடையச் செய்ய வேண்டும்.
சட்டப்பூர்வமான பணிகளுக்கான பரப்புரைகளையும் தயாரிப்புகளையும் மேற்காெள்வதையும், மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டியமைப்பதையும் நோக்கி நாம் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
8) ஆயுதப் புரட்சியைப் பற்றிய நமது கருத்தாக்கம் மார்க்சியம்-லெனினியம்-மாவாேவின் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது ஒன்று மட்டுமே நீண்டகால மக்கள் யுத்தமாக இருக்க முடியும்.
மக்கள் படையைக் கட்டியமைப்பதும் மக்கள் யுத்தத்தை நடத்துவதும் தவிர்க்க முடியாதபடி மக்களின் ஆயுதப் போராட்டத்துடன் இணைப்புக் கொண்டதாகும்.
இது ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் திட்டத்தை க் கொண்டது என்பதாேடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்தப்படுவதும் ஆகும்.
9) தற்பாேது விவசாயப் புரட்சியை முதன்மையான அச்சாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நாம் இருக்கிறாேம்.
விவசாயிகளை ஆதாரமாகக் கொண்டு கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்கள் நிலையான ஜனநாயகத்திற்கான சீர்திருத்தங்கள் நிலச்சீர்திருத்தங்கள் ஆகியவற்றாேடு இணைக்கப்பட வேண்டும்.
மேலும் மக்கள் அதிகாரத்திற்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதாேடும் நாடு தழுவி நன்றாகப் பின்னி அமைக்கப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளை (குறிப்பாக விவசாய மக்கள் திரளினரைக் கொண்டு) கட்டியமைப்பதாேடு இணைக்கப்பட வேண்டும்.
உழைப்பவனுக்கே நிலம் என்பதை மைய முழக்கமாகக் கொண்ட விவசாயப் புரட்சியின் கடமை என்பது பெரும் நிலப்பிரபுக்களின் நிலம் மற்றும் அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் ஒரு வர்க்கம் என்ற முறையில் நிலவுடமை அரை நிலவுடமை நிலப்பிரபுக்களை இல்லாதாெழிப்பதையும் பறிமுதல் செய்தவற்றை நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்தளிப்பதையும், நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை தூக்கியெறிந்து அதனிடத்தில் மக்கள் அரசு அதிகாரத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
9-அ) சாதிய அமைப்பு நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிரிக்க முடியாத பகுதியாகும்.
இவ்வமைப்பு காலனி ஆட்சியாளர்களாலும் தற்பாேதுள்ள தரகு ஆளும் வர்க்கங்களாலும் பாதுகாத்துத் தொடரச் செய்யப்படுகிறது.
எனவே சாதி ஒழிப்பிற்கான போராட்டம் விவசாயப் புரட்சியின் பிரிக்க முடியாத முக்கியமான பகுதியாக அமைகிறது, மேலும் அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியும் ஆகும்.
ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற நகர்ப்புற உழைக்கும் மக்கள் ஆகியாேரைக் கொண்ட மக்கள் திரளினர் முதன்மையாகத் தலித் அல்லது பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே ஆவர்.
ஆளும் வர்க்கங்கள் தலித்துகளை எப்பாேதும் பிளவுபடுத்தி வைக்கவே முயற்சிக்கின்றனர்.
மேலும் சாதி அடிப்படையிலான பாகுபடுத்தலுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அவர்கள் நடத்தும் போராட்டங்களைச் சீர்குலைப்பதன் மூலம் ஏகாதிபத்தியத் தரகு அதிகார வர்க்க மூலதனம் மற்றும் நிலப்பிரபுத்துக் கூட்டுச்சதிகளை மூடி மறைத்துவிடலாம் என்ற நோக்குடன் அவர்களை அணிதிரட்டி வருகின்றனர்.
அவர்களை அமைப்பாகக் கட்டியமைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாகும்.
உயர் சாதியிலுள்ள ஏழைகளையும் தலித் சாதியிலுள்ள ஏழைகளையும் ஒற்றுமைப்படுத்துவதன் மூலம் நாம் ஒடுக்கப்படும் மக்களின் இயக்கங்களைப் பலப்படுத்த வேண்டும்.
சாதிப் பாகுபாடுகளுக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாக வளர்ச்சியடையும் போது மட்டுமே அப்போராட்டம் தனது உண்மையான இலக்கைச் சாதிக்க முடியும்.
அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியாக உள்ள மேல் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளிடம் ஆதிக்கச் சாதி மனப்பான்மை இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது, எனவே இந்தப் போக்கிலிருந்து மேல் சாதிகளைச் சார்ந்த ஏழைகளை மீளச் செய்வதற்கான முயற்சிகளை நாம் மேற்காெள்ள வேண்டும்.
இதற்காக நாம் பழமையான மரபு வழிப்பட்ட கருத்தியல்களை எதிர்ப்பதற்கு அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
சாதிகளைத் தாண்டி எழுச்சி பெறும் வகையில் வர்க்க அமைப்புகளில் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் நாம் ஒன்றுபடுத்தியாக வேண்டும்.
விவசாயப் புரட்சியில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் சாதீய அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை அமைப்பாக்க வேண்டியது அவசியமாகும்.
9-ஆ) நிலப்பிரபுத்துவம் பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்துகிறது
அது சிந்திக்க இயலாதவர்கள், முக்கியத்துவம் இல்லாதவர்கள் உரிமைகளற்றவர்கள் என்ற ஒருசார்பு நிலையில் பெண்களை இழிவுபடுத்தியுள்ளது.
ஏகாதிபத்தியம் பெண்களை ஒரு சரக்காகவும், வருமானத்திற்கான கருவியாகவும் கருதுகிறது.
இந்த இரண்டின் கூட்டுக் கலவையான தற்பாேதைய அமைப்பு பெண்களைப் படுபாதாளத்தில் தள்ளியுள்ளது.
எனவே நாம் நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஆணாதிக்க ஒடுக்குமுறை, ஆணாதிக்கக் கருத்தியல், ஆணாதிக்க குடும்ப அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் போராடியாக வேண்டும்.
9-இ) ஒரு விவசாயப் புரட்சி இயக்கத்தைக் கட்டியமைக்க ஒரு விவசாயப் புரட்சித் திட்டம் இருந்தாக வேண்டும்.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பொதுவான நிலப்பிரபுத்துவ உறவுகள் இருந்தாலும் கூட நிலப்பிரபுத்துவச் சுரண்டலின் வடிவங்களும் அளவுகளும், நிலக்குவியலும், நில உறவுகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது என்பதாேடு ஒரு மாநிலத்தின் உள்ளேயே கூட ஒரு பகுதிக்கும் இன்னாெரு பகுதிக்கும் இடையில் வேறுபட்டு உள்ளன.
மாநிலக் கிளைகள் அவற்றின் குறிப்பானத் தன்மைகளைக் கணக்கில் கொண்டு விவசாயப் புரட்சிக்கான திட்டத்தை வகுக்க வேண்டும்.
இதைப்பற்றி ஆய்வாே, பயனை விளைவிக்கக் கூடிய திட்டமாே, இல்லாவிட்டால் புரட்சிகர இயக்கமாே அல்லது மக்களின் ஆயுதப் போராட்டமாே சாத்தியமில்லை.
9-ஈ) இவ்வியக்கத்தின் பொறுத்தமான கட்டத்தில் ஆயுதப் புரட்சி (நிலப்பறிமுதல்) தொடங்கப்படும்.
மேலும் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், அராஜகவாதம்-அதிதீவிரவாதம் ஆகியவற்றின் வெளிப்பாடான தனிநபர் அழித்தாெழிப்புப் பாதைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது எந்த வகையிலேனும் விவசாயப் புரட்சிகர இயக்கத்தை குறைத்து மதிப்பிடுவாேமானால் அது ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவை தவிர்க்க முடியாதபடி இழக்கச் செய்யும் என்பதாேடு அரசு இயந்திரத்தின் தாக்குதலை எதிரிடுவதில் அவர்களை தயாரற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.
எனவே விவசாயப் புரட்சிகரப் போராட்டத்தின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிற அல்லது புறந்தள்ளுகிற எல்லாக் கோட்பாடுகளும் ஒன்று இடது அதிதீவிரமாகும், அல்லது வலது சந்தர்ப்பவாதமாகும்.
எனவே இவை நிராகரிக்கப்பட்டாக வேண்டும்.
இங்கு ஆயுதப் போராட்டமே மிக உயர்ந்த வடிவத்திலான வர்க்கப் போராட்டமாகும் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தக் கட்டத்தை அடைவதற்கு மக்கள் ஜனநாயக மற்றும் குடி உரிமைக்கான போராட்டங்கள் உட்பட எல்லா வகைப்பட்ட மக்கள் திரள் மற்றும் வர்க்கப் போராட்டத்தினூடே பயணிக்க வேண்டும்.
10) நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறும் போது நிலப்பிரபுக்கள், குண்டர்கள், காவல்துறையினர் ஆகியாேர் விவசாயிகளின் இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
இவர்களின் எதிர்புரட்சி முறையை எதிரிடுவதற்குக் கட்சி ஆரம்ப முதலே உள்ளூர் மட்டத்தில் தயார் நிலையிலுள்ள ஆயுதங்களுடன் மக்களைத் தயார்படுத்த வேண்டும், கட்சி புறச் சூழலுக்கு ஏற்பவும், மக்களின் தயார் நிலைக்கு ஏற்பவும் கிராமப்புறத் தொண்டர் குழுக்களையும், கிராமப்புறப் பாதுகாப்புக் குழுக்களையும் கட்ட வேண்டும்.
இது போன்ற விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைக்கும் போக்கினூடே சூழ்நிலையின் கோரலுக்கு ஏற்ப இயக்கத்திலுள்ள போர்க்குணம் கொண்டாேரைக் கொண்டு சுய பாதுகாப்புக் குழுக்களை அமைக்கலாம்.
மக்களை அமைப்பாக்குவதும் மக்களின் எதிர்ப்புக்குத் தலைமை கொடுப்பதும், மக்களின் இயக்கத்தைப் பாதுகாப்பதும், இக்குழுக்களின் கடமையாகும். எல்லாச் சாத்தியமான வடிவங்களிலும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
மக்கள் இயக்கத்தை அழிக்கும் நோக்குடன் அதிகார வர்க்கமும் காவல்துறையும் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
இதற்காக அரசு ஒடுக்குமுறை என்ற ஆயுதம், சட்டம் என்ற ஆயுதம் ஆகிய இரண்டு ஆயுதங்களையும் ஒருங்கிணைக்கும் என்பதாேடு இயக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து நசுக்குவதற்காகச் சலுகைகளையும் வழங்கும் இத்தகைய சூழலை எதிர்காெள்ளும் வகையில் இடர்பாடுகளிலிருந்து மீள்வதற்கு மக்களைப் பொறுமையாகத் தயார்படுத்த வேண்டும். முக்கியமான முன்னணித் தோழர்கள் மக்களிடையே இரகசியமாகப் பணிபுரிவது போன்ற சூழலுக்கு, பொறுத்தமான செயலுத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
11) கட்சியின் கடமை என்பது, நேரடி அனுபவத்தின் மூலம் ஆயுதமேந்திய எதிர்ப்புக்கான உணர்வினைப் பெறவும், தேவையான முறையில் தயாரிப்புகளுடன் இருக்கவும் மக்களுக்கு உதவுவதே ஆகும்.
விவசாயிகளின் புரட்சிகர இயக்கம் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்து மக்களுக்கு விநியாேகிப்பது மக்களின் ஜனநாயக அதிகாரத்தைக் கட்டியமைப்பது போன்ற மையமான பிரச்சனைகளாேடு இணைக்கப்படாவிட்டால் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மேலும் வளர முடியாது.
நமது புரட்சியின் பின்னணியில் நமது நாட்டினது ஆயுதப்புரட்சி முதன்மையான முறையில் விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டமாகும்.
ஆயுதப் புரட்சியை தொடங்குவதற்குக் கட்சி நாட்டினது ஒட்டு மொத்தச் சூழலையும் மதிப்பிட வேண்டும் என்பதாேடு அந்தப் பகுதியின் புவியியல் சூழல், மனத்திட்பம், ஏதேனும் ஒரு வடிவில் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்பதற்கான மக்களின் தயார் நிலை ஆகியவற்றையும் மதிப்பிட வேண்டும்.
அதே போல பொருளாதார ரீதியில் தாக்குப்பிடிக்கும் தன்மை,
போராட்டத்தை நடத்துவதற்கான கட்சியின் பலம், தொடர்புடைய பகுதியிலாே, பகுதிகளிலாே மக்களிடமிருந்து எதிரி வர்க்கங்கள் தனிமைப்பட்டிருப்பது ஆகியவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும் இது ஒரு அகில இந்தியக் கண்ணாேட்டத்தையும் செயலுத்தி ரீதியான திட்டமிடலையும் முறையாக சக்திகளை (படைகளை) முறைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் நிறுத்துவது போன்றவற்றையும் கோருகின்றன.
12) தளப்பிரதேசத்தை நிறுவுவது என்பது கடுமையான காரியமாகும்.
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு செயலுத்திகளைப் பயன்படுத்தித் தளப்பிரதேசங்களை நிறுவ முயன்று கொண்டிருக்கின்றனர்.
பீகார், வங்கம், ஆந்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் கடந்த 40 ஆண்டுகால அனுபவம் காட்டுவது யாதெனில் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் நிலப்பிரபுக்களின் பொருளாதார, சமூக, அரசியல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் உடைத்தெறிவதிலும் ஒரு கரு வடிவிலான உள்ளூர்மட்ட அதிகாரத்தை நிறுவுவதிலும் வெற்றி கண்டுள்ளனர் என்பதே ஆகும்.
ஆனால் ஆளும் வர்க்கங்களின் மையப்படுத்தப்பட்ட அரசை எதிர்காெள்ளும் போது இப் போராட்டம் வெற்றியடையவில்லை.
அதனினும் மேலாக புரட்சிகர சக்திகளைக் கட்டுப்படுத்துவதிலும் பெருமளவில் சேதாரத்தை விளைவிப்பதிலும் அரசு வெற்றியடைந்துள்ளது.
இந்தக் கட்டத்தில் சூழல் தேக்கமுற்றுள்ளது.
அதாவது,புரட்சிகர சக்திகள் அரசை அழித்துத் தளப்பிரதேசத்தை நிறுவும் ஆற்றல் மிக்கதாகவும் இல்லை அதே போல் அரசு புரட்சிகர சக்திகளை அழிக்கும் ஆற்றல் படைத்ததாகவும் இல்லை.
தளப்பிரதேசங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னால் பலபகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் மக்களினது ஆட்சி, அல்லது அதிகாரத்திற்கான போட்டி நிலவுகிற அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தினரின் அதிகாரமும் தொடரும் என்ற பொருளில் இரட்டை அதிகாரம் நீண்ட நாளைக்குத் தொடரும் என்பதை நமது அனுபவம் காட்டுகிறது.
இது இந்தியப் புரட்சியின் குறிப்பான அம்சமாகும்.
இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் எதிரியைத் தோற்கடிக்கப் பொறுத்தமான செயலுத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிலப்பிரபுக்களின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் அழித்தாெழித்து உள்ளூர் மட்டத்தில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும்.
நாடு புரட்சிகர நெருக்கடியில் நுழையும் தருணத்தில் அரசை அழித்தாெழிப்பதற்கும், தளப்பிரதேசங்களை நிறுவுவதற்கும் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களை கட்டியமைப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
மேலும் அரசுடன் மோதுவதற்காக அகநிலைத் தயாரிப்புகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆயுதப்புரட்சிக்கான செயலுத்தி செயல்படுத்தப்படுமானால் இரட்டை அதிகாரமுள்ள அரசு என்ற நிலைமாறி தளப்பிரதேசங்களை அமைப்பது என்பது சாத்தியமாகும்.
நாம் அத்தகைய கட்டத்தை எட்டுவதற்கு எல்லா வடிவங்களிலான போராட்டங்களையும் நடத்தி எதிரியைத் தனிமைப்படுத்த வேண்டும்.
13) பசுமைப் புரட்சி, தாராளமயமாதல், என இ.பி, சிறப்புப் பொருளாதார மண்டலம், சிறப்பு விவசாய மண்டலம் போன்ற பல்வேறு பெயர்களின் கீழ் இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏகாதிபத்தியத்திற்கு ஏவல் புரியும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளால் நமது நாட்டினுள் ஏகாதிபத்தியச் சூரையாடல் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது.
நமது மனித மற்றும் இயற்கை மூலாதாரங்களை ஏகாதிபத்தியவாதிகள் ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்து வருகின்றனர்.
அதன் நச்சுக்கரங்கள் கிராமப்புறங்கள் வரை பரவியுள்ளன, மற்றும் அதன் அழிவுத் தரத்தக்க விளைவுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான விவசாயிகளின் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதபடி அவ்வளவு நெருக்கமாகப் பிணைத்துள்ளது.
நமது புரட்சியின் இரண்டு அடிப்படைக் கடமைகளான தேசியம் மற்றும் ஜனநாயகம் என்பன வேறுபட்டதும் ஒன்றுபட்டதும் ஆகும்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடாமல் நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிய முடியாது.
ஏனென்றால் ஏகாதிபத்தியமே அதற்கு முதன்மையாக முட்டுக் கொடுக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முதன்மைப் புரட்சிகர சக்தியான விவசாயிகளைக் கட்டியமைத்து அவர்களை முழுமையாகப் பங்கு பெறச் செய்யாமல் ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுப்பதற்கான ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த புரட்சிகரப் படைப்பிரிவைக் கட்டியமைக்க முடியாது.
எனவே திசை விலகலுக்கு ஆளாகாமல் விவசாயப் புரட்சிக் கடமையில் கவனத்தைக் குவிக்கும் போதே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எல்லாச் சாத்தியமான வடிவங்களிலும் பரப்புரைகள், கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவற்றை நாம் தீவிரப்படுத்தியாக வேண்டும்.
14) நமது நாட்டின் நகரங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனவே, நகரங்களிலான நமது வேலைகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டவை ஆகும் நமது நகரங்கள் ஆளும் வர்க்க அதிகாரத்தின் மைய நரம்பு மண்டலமாக இருக்கும் அதே நேரத்தில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றவர்களையும் உள்ளடக்கியதாேடு உணர்வு பூர்வமாக அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத் திரளினரும் அங்குள்ளனர்.
அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மகத்தான மரபினைக் கொண்டவர்கள் ஆவர்.
1947-க்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதான பெருந்திரள் மக்கள் இயக்கங்களைக் காண நேரிட்டது.
இந்தப் பல இயக்கங்கள் பாராளுமன்ற வரம்பையும் தாண்டிச் சென்றன.
1974-ல் நடைபெற்ற அகில இந்திய இரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நகர எல்லைகளையும் தாண்டிக் கிராமப்புறங்களுக்கும் பரவின.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இயக்கமும் கூட அகில இந்தியப் பரிமாணம் கொண்டதாகும், இந்த இயக்கம் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திரா காங்கிரஸின் எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது.
தொடக்கத்தில் நக்சல்பாரி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நடத்திய கலகத்தினது காட்சிப் புலத்தில் பெரிய எண்ணிக்கையிலான நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், சிப்பந்திகள், பெண்கள் ஆகியாேர் போராட்டப்பாதையில் முனைந்து முன்னாேக்கி வந்தனர்.
அரசாங்கத்தின் தாக்குதல்கள் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளர்களும், விவசாயிகளும் போராட்டங்களை நடத்தும் போது அவர்களிடையே அரசில் உணர்வை வளர்ப்பதற்கு மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள், பெண்கள் ஆகியாேர் குறிப்பிடத்தக்க(அல்லது வியக்கத்தக்க) பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1946-ல் நடை பெற்ற இராணுவத்தினரின் கலகம் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல் துறையினரின் கலகம் 1970-களில் நாடு தழுவி நடைபெற்ற காவல் துறையினரின் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் துறையினரின் கலகம் ஆகியவை நகர்ப்புறப் பணிகளின் இன்றியமையாமையை வெளிப்படையாகக் காட்டுகின்றன.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நமது நாட்டினது விவசாயப் புரட்சிகரப் போராட்டத்தில் அவை முக்கியத்துவமுள்ள பாத்திரத்தை வகிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
1946-ல் இராணுவத்தில் நடந்த கலகம், 1970-களில் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல்துறை மற்றும் மத்தியச் சேமப் படையினரின் (CRP) வேலை நிறுத்தங்கள் ஆகியவை நகர்ப்புற வேலைகளின் தவிர்க்க முடியாத தன்மையை வெளிப்படையாகக் காட்டுகின்றன.
எனவே விவசாயப் புரட்சியை முன்னாேக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால் நகர்ப்புற வேலைகளை ஒதுக்குவது என்பதற்கு இடமே இல்லை.
கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதமேந்திய விவசாயிகளின் போராட்டங்களுக்கு நகர்ப்புற வேலைகள் துணை செய்வதாக அமையும் வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் நமது நாட்டில் நடைபெறும் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தில் நகர்ப்புற வேலைகள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
15) புதிய ஜனநாயகப் புரட்சியின் வளர்ச்சிப் போக்கிலான பல்வேறு கட்டங்களில் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய ஐக்கிய முன்னணி வெற்றிக்கான ஒரு மிக முக்கியமான ஆயுதமாகும்.
ஐக்கிய முன்னணி என்பதற்குப் பொருள் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளிகளைக் கொண்டு கட்டியமைக்கப்படுவதாகும் என்ற இயந்திரவியல் கண்ணாேட்டம் ஒன்று நிலவுகிறது.
தொழிலாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியில் விவசாய வர்க்கம் முதன்மையான சக்தியாகும். குட்டி முதலாளிகள் இன்னாெரு சக்தியாகும் இவ்வாறாக விவசாயிகளும் குட்டி முதலாளிகளும் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளிகள் ஆவர். ஐக்கிய முன்னணி என்பது நிச்சயமாக வர்க்க அடிப்படையிலானதாக இருக்கும்.
எப்படியிருப்பினும் தொழிலாளி வர்க்கம் அதனது இயற்கையான கூட்டாளிகளாேடு தேசிய முதலாளிகளை யும் கொண்ட முன்னணியை க் கட்டுவது ஐக்கிய முன்னணியைக் கட்டுவதற்கான முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஐக்கிய முன்னணியைக் கட்டுவதில் இன்னாெரு விசயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
வர்க்கங்களாகப் பிளவுற்றுள்ள ஒரு சமூகத்தில் ஒவ்வாெரு அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எனவே நாம் தொழிலாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள் ஆகிய வர்க்கங்களை பல்வேறு மக்கள் திரள் அமைப்புகள் மூலம் முன்னணியாகக் கட்டியமைக்கும் அதே வேளையில் பல்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனும் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டும்.
நாம் அடிக்கடி பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட முன்னணிகளைப் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கட்டியமைத்துக் கொள்ளலாம்.
இத்தகைய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகளைப் புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் பல்வேறு வர்க்கங்களுடன் இணைந்துக் கட்டியமைக்கும் ஐக்கிய முன்னணி என்ற கடமையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
போராட்டங்களுக்கான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகள் தற்காலிகத் தன்மை கொண்டவையும் இயல்பில் வரம்புக்கு உட்பட்டதும் ஆகும்.
பிரதான எதிரியைத் தனிமைப்படுத்துவது, சமூகத்திலுள்ள பல்வேறு முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவை மட்டுமே இவற்றின் நோக்கமாகும் இத்தகைய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட மேடைகளை நாம் நிராகரிக்கக் கூடாது ஏனெனில் அவ்வாறு செய்தால் தொழிலாளி வர்க்கத்தைப் பிற வர்க்கங்களிலிருந்து தனிமைப்படுத்தும் விளைவையே அது ஏற்படுத்தும் என்பதால்தான்.
சுருங்கச் சொன்னால் புதிய ஜனநாயகப் புரட்சிக் காலகட்டம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான, தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் (ஊசலாடும் கூட்டாளி) ஆகிய வர்க்கங்களைக் கொண்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் பாதுகாப்பது என்பது ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும்.
கட்சி கிராமப்புறங்களிலும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணிகளைக் கட்டியமைக்க வேண்டும்.
இது முதன்மையாக நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளைச் சார்ந்து நின்று, மத்தியத்தர விவசாயிகளை வென்றெடுத்து, பெரும் பகுதியினரான பணக்கார விசாயிகளை நடுநிலைப்படுத்தி வென்றெடுத்து, சிறிய நிலப்பிரபுக்களை நிலச் சீர்திருத்தங்களுக்கு இணக்கமாக இருக்குமாறு அனுமதித்து ஒட்டு மொத்தமாகப் பெரும் நிலப்பிரபுக்களையும் நிலப்பிரபுத்துவத்தையும் தனிமைப்படுத்தி இல்லாதாெழிப்பதை உள்ளீடாகக் கொண்டதாகும்.
16) புரட்சி வெற்றியடைவதற்கு, மார்க்சியம் லெனினியம், மாவாேவின் சிந்தனைகள் ஆகியவற்றை ஆயுதமாகக்கொண்ட ஒரு புரட்சிக் கட்சி கட்டியமைக்கப்பட்டாக வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த வடிவிலான வர்க்க அமைப்பாகும்.
இது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகும், இக்கட்சி புறநிலை உண்மையை விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்து கொண்ட, ஜனநாயக, மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, துல்லியமான போராட்ட நடைமுறையில் சோதிக்கப்பட்ட, விமர்சனம், சுயவிமர்சனம் என்ற செயல்முறையைப் பயன்படுத்துகிற மக்கள் பெருந்திரளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்த கட்டுப்பாடுடைய கட்சியாகும்.
ஒவ்வாெரு சட்டப்பூர்வமான வாய்ப்பையும் பயன்படுத்துவதை நிலைநிறுத்தும் அதே வேளையில் கட்சி என்பது அடிப்படையில் இரகசியமானதாக இருக்க வேண்டும்.
எனவே கட்சி தன்னைச் சட்ட விராேத அமைப்புக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். சட்ட வாய்ப்புகளைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் கட்சி சட்டப்பூர்வமான அமைப்பாகச் சீரழியாதபடி இருப்பதை உத்தரவாதம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பான சூழலுக்கு ஏற்ப கட்சி அதன் எந்த ஒரு பிரிவாயினும் அது வெளிப்படையாகச் செயல்பட வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மாணிக்கும்.
17) கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகத் தொழிலாளி வர்க்கம் நமது நாட்டின் புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் தத்துவார்த்த தலைமை அளிக்கும்.
எப்படியிருப்பினும் நமது நாட்டில் புரட்சிகர நடவடிக்கைகள் மீதான தொழிலாளி வர்க்கத் தலைமை என்ற அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தொழிலாளி வர்க்கம் அரசியல் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் விவாயப் புரட்சிக்குத் தலைமை அளிக்கும், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக அரசியல் வேலை நிறுத்தங்களை நடத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தால் இது போன்ற தலைமையை அளிக்க முடியும்.
தொழிலாளி வர்க்க முன்னணியினரைப் போர்க்குணமுள்ள விவசாயப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க கிராமப்புறங்களுக்கு அனுப்புவதன் மூலம் தலைமை அளிக்க முடியும்.
இதற்கான முதன்மையான தேவை அலசி ஆராய்வதும் கருத்தூன்றிப் பயில்வதும் ஆகும்.
ஒரு முறை விவசாயப்புரட்சி தொடங்கிவிட்டால் ஆயுதக் குழுக்களை கிராமப்புறங்களுக்கு அனுப்புவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தால் தலைமை அளிக்க முடியும்.
இதைத் தவிர எதிர்காலப் போராட்டங்களிலிருந்து தோன்றி எழும் பிற செய்முறைகள் நமக்கு மேலும் படிப்பினைகளை அளிப்பதாக இருக்கும்.
18) புதிய ஜனநாயகப் பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கு எல்லாப் புரட்சிகர வா்க்கங்களையும் பிரிவினரையும் ஐக்கியப்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
சீரழிந்த இந்தச் சமூக அமைப்பைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாதுகாக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டின் உதவியாேடும் வாழ்த்துக்களாேடும், தற்பாேதைய ஆளும் வர்க்கங்களாலும், அவர்கள் தரும் கூலிக்கு மாரடிக்கும் அறிவு ஜீவிகளாலும் உருவாக்கப்பட்டுள்ள சீரழிவுக் கலாச்சார ஆதிக்கம் பெற்றுள்ள சூழலுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக புதிய கலாச்சார இயக்கம் செயல்படும்.
எனவே பண்பாட்டு அரங்கத்தில் நமது நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
19) இந்தியாவின் இன்றைய சூழலில் நாட்டினது பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற புரட்சிகரக் குழுக்களும் தனிநபர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய குழுக்களையும், தனிநபர்களையும் மார்க்சியம்-லெனினியம் மாவாே-வின் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டியது நிச்சயமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
தத்துவார்த்த அரசியல் பற்றிய புரிதலைப் புரட்சிகர நடைமுறையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய ஐக்கியத்தைக் கட்டியமைக்க முடியும், இதற்குப் பொருள் தத்துவார்த்த அரசியல் போராட்டங்கள், வெறும் வார்த்தை அளவிலான விமர்சனங்களாகவும், அவதூறுகளாகவும், தனிப்பட்ட தாக்குதல்களாகவும் தரங்கெட்டுவிடக்கூடாது என்பதாேடு அவை வர்க்கப்போராட்ட நடைமுறையில் பரிசாேதிக்கப்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை கோட்பாட்டு ரீதியான தத்துவார்த்தப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரே கட்சியாக ஐக்கியப்படுத்த முடியும்.
மார்க்சியம் -லெனினியம் மாவாே-வின் சிந்தனைகள் ஆகிய புரட்சிகரத் தத்துவங்களை ஆயுதமாகக் கொண்ட இது போன்ற கட்சியால் மட்டுமே புரட்சியை இறுதிவரை தலைமை ஏற்று நடத்த முடியும்.
எனவே அது போன்ற ஒரு கட்சியைக் கட்டுவதை நோக்கி அனை த்து முயற்சிகளையும் குவிமையப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
***************
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
பதிப்பாளர்:
விஸ்வம்
பொதுச் செயலாளர்
இ.க.க.(மா-லெ)
பிரதிகளுக்கு
அலாேக் முகர்ஜி
சடைகாலி தாலா
போல்பூர் அஞ்சல்
பீர்பும் மாவட்டம்
மேற்கு வங்காளம்-731204
Published by:
Viswam
General Secretary
C.P.I.(M-L)
For Copies
Aloke Mukherjee
Sadaikali Tala
Bolpur(po)
Birbum (District)
West Bengal -731204
………………தொடரும்